இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட புதிய நீதிக் கட்சி தயாராக உள்ளது என கட்சியின் தலைவர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் கூட்டணி விவராகத்தில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.
அந்தவகையில் அதிமுகவில் இதுவரை பாஜகவிற்கு 20 சட்டப்பேரவைத் தொகுதிகளும் ஒரு நாடாளுமன்ற தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
பாமகவிற்கு 23 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளது. தேமுதிக உள்ளிட்ட மற்ற சில கட்சிகளுடன் உடன்படிக்கை எட்டவில்லை.
இந்நிலையில் சென்னையில் அதிமுகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தையில் புதிய நீதிக் கட்சி ஈடுபட்டது. அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சி தலைவர் சண்முகம், இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் எனத் தெரிவித்தார்.