கிளிநொச்சி வட்டக்கச்சி பிரதேசத்தில், நேற்றுமாலை தாயாரால் கிணற்றில் வீசப்பட்ட, ஏனைய இரண்டு குழந்தைகளின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தனது மூன்று பிள்ளைகளையும் அணைத்துக் கொண்டு, , கிணற்றுக்குள் குதித்த தாயார் மட்டும், அயலவர்களால் மீட்கப்பட்ட நிலையில், இரண்டு வயது ஆண் குழந்தையின் சடலம், நேற்று கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து நடத்தப்பட்ட தேடுதலில், ஐந்து வயது மற்றும் எட்டு வயதுடைய இரு பெண் குழந்தைகளினதும் சடலங்கள், நேற்றிரவு கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.
அதேவேளை, இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய தாயார் காவல்துறையினர்ரால் கைது செய்யப்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.