முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

இராணுவ சோதனைச் சாவடியை நிரந்தரமாக்கும் செயற்பாடு

344

வவுனியா- ஓமந்தையில் கொரோனா அச்சுறுத்தல் காலப்பகுதியில், தற்காலிகமாக அமைக்கப்பட்ட இராணுவ சோதனைச் சாவடியை நிரந்தரமாக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

நாட்டில் கடந்த வருடம், கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்து காணப்பட்டமையினால், ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது.

இந்த காலப்பகுதியில் மக்களை கண்காணிப்பதற்காக வவுனியாவில் ஓமந்தை உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில், தற்காலிக இராணுவ சோதனைசாவடிகள் அமைக்கப்பட்டன.

நாட்டில் ஊடரங்கு தளர்த்தப்பட்டு வழமையான செயற்பாடுகளை முன்னெடுக்க அனைத்து மக்களும் தற்போது ஆரம்பித்து விட்டனர்.

இந்தநிலையில் வவுனியா- ஒமந்தையில் அமைக்கப்பட்ட சோதனை சாவடியை நிரந்தரமாக்கும் முயற்சியில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர் என்று பிரதேச மக்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *