முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

இலங்கையின் அரசியல் குழப்பநிலை குறித்து அமெரிக்கா, அவுஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான் இடையே கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது

525

இலங்கையில் சனநாயகத்தை நிலைநாட்டுவதற்கான ஒத்துழைப்பினை வழங்க ஐக்கிய அமெரிக்கா, அவுஸ்திரேலியா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளுக்கு இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இந்திய – பசுபிக் பிராந்திய நாடுகளுக்கு இடையிலான கலந்துரையாடல் நேற்று சிங்கப்பூரில் நடைபெற்றது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலையை சனநாயகத்துக்கு அமைவாக சனாதிபதி விரைந்து தீர்க்க வேண்டும் என்று இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன்போதே குறித்த விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான புதிய அமெரிக்கத் தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் (Alaina B. Teplitz) தமது கீச்சகத்திலும் அது குறித்து பதிவிட்டுள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *