முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

இலங்கையில் உண்மையான சமாதானம் இன்னமும் ஏற்படுத்தப்படவில்லை.

1249

இலங்கையில் உண்மையான சமாதானம் இன்னமும் ஏற்படுத்தப்படவில்லை என்று இலங்கை சனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போதே இதனைக் குறிப்பிட்டுள்ள அவர், அரசியல்வாதிகள், படைவீரர்கள் ஆகியோரின் அர்ப்பணிப்புடன் பௌதீக ரீதியாக தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட போதிலும், நாட்டில் உண்மையான சமாதானம் இன்னமும் கட்டியெழுப்பப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

போர் காரணமாக பெரும் எண்ணிக்கையிலானவர்கள் நாட்டை விட்டு வெளியேறிச் சென்றதாகவும், இது நாட்டுக்கு பாரிய இழப்பு எனவும் குறிப்பிட்டுள்ள அவர், நாட்டை பிளவடையச் செய்யும் எண்ணக்கரு என்று நாட்டை விட்டு முழுமையாக இல்லாதொழிக்கப்படுகின்றதோ, அப்போதுதான் போர் முழுமையாக வெற்றியீட்டப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

புதிய அரசியல் சாசனம் நாட்டை பிளவடையச் செய்யும் வகையில் அமைந்துள்ளதாக பல்கலைக்கழக மாணவர்கள், பௌத்த பிக்குகள் மற்றும் வெளிநாட்டில் வாழ்ந்து வருவோரிடம் பிரச்சாரம் செய்யப்படுவதாகவும் அவர் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

வழங்கப்படும் தீர்வு அனைத்து தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் அமைய வேண்டியது அவசியமானது எனவும் தெரிவித்துள்ள அவர், முன்னாள் சனாதிபதி மகிந்த ராஜபக்ச, ஆட்சியில் இருந்த காலத்தில் தேசியப் பிரச்சினை தொடர்பில் ஒரு விதமாகவும், ஆட்சி அதிகாரத்தில் இல்லாத போது வேறு விதமாகவும் நிலைப்பாடுகளைக் கொண்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு பேச்சுவார்த்தை மேசைக்கு வருமாறு மகிந்தவிற்கு அழைப்பு விடுப்பதாகத் தெரிவித்துள்ள மைத்திரிபால சிறிசேன, வடக்கு மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு உள்ள சிறந்த தலைவர் இரா.சம்பந்தன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *