முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

இலங்கையை பூர்வீக இடமாக கொண்ட அவுஸ்திரேலிய ஆசிரியையான யசோதை செல்வகுமாரன்,சர்வதேச ஆசிரியர் பரிசுக்கான பட்டியலில் பத்து பேரில் ஒருவராக தெரிவாகியுள்ளார்

523

இலங்கையை பூர்வீக இடமாக கொண்ட அவுஸ்திரேலிய ஆசிரியையான யசோதை செல்வகுமாரன், 1 மில்லியன் டொலர் சர்வதேச ஆசிரியர் பரிசுக்கான பட்டியலில் பத்து பேரில் ஒருவராக தெரிவாகியுள்ளார்.

179 நாடுகளில் இருந்து கிடைத்த 10,000 விண்ணப்பங்களில் இருந்து இலங்கையைச் சேர்ந்த தமிழ் பெண் யசோதை செல்வகுமாரனும் தெரிவாகியுள்ளார்.

மிஸ் செல்வா என்று மாணவர்களால் அறியப்படும் இந்த ஆசிரியை மேற்கு அவுஸ்ரேலியாவின் ரூட்டி ஹில் என்ற மனித நேய பாடசாலையில் கற்பிக்கிறார்.

இந்தநிலையில் அவுஸ்ரேலியாவில் இருந்து இந்த பரிசுக்காக தெரிவு செய்யப்பட்ட தனி ஒருவராக யசோதை செல்வகுமாரன் பெயரிடப்பட்டுள்ளார். 10 வயதாக இருக்கும் போது யசோதை அவுஸ்ரேலியாவுக்கு பெற்றோரால் அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் ஒரு மில்லியன் டொலர் பரிசுக்கான தெரிவுக்காக யசோதை செல்வகுமாரன், எதிர்வரும் மார்ச் மாதம் டுபாய்க்கு செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *