இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் தீபிகா உடுகமவுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் தெரிவிக்கப்படும் கருத்துக்கள் தொடர்பில், பிரதமர் அலுவலகம் கண்டனம் தெரிவித்துள்ள அதேவேளை, இந்த விடயம் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு காவல்துறை மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக, இலங்கை பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரண தண்டனை நாட்டில் நிறைவேற்றப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் வெளியிட்ட கருத்தே இதற்கு காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறான நிலையில், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் அடங்கலாக ஏனைய ஆணையாளர்களுக்கு பாதுபாப்பை உறுதிப்படுத்துமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக குறித்த அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசியலமைப்பின் கொள்கைகளுக்கமைய அமைக்கப்படும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவானது, சுயாதீனமான செயற்படும் ஓர் நிறுவனமாகும் எனவும, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் இவ்வாறு பகிரங்கமாக அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதாகவும் இல்ஙகை பிரதமர் அலுவலம் சுட்டிக்காட்டியுள்ளது.