மொராக்கோவும், இஸ்ரேலும், இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதற்கு இணக்கம் தெரிவித்துள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், மொராக்கோ மன்னருடன், இன்னு பேச்சு நடத்தினார்.
இதன்போது, இஸ்ரேலை தனி நாடாக அங்கீகரித்து அந்தநாட்டுடன் அமைதி ஒப்பந்தம் செய்து கொள்வதற்கும், முழுமையான தூதரக உறவை தொடங்கவும் மொராக்கோ மன்னர் இணக்கம் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் இந்த ஆண்டில் இஸ்ரேலுடன் அமைதி உடன்பாடு செய்து கொண்ட 4-வது அரபு நாடாக, மொராக்கோ இணைந்து கொண்டுள்ளது.