முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

இஸ்ரேல் நடத்திய ஏவுகணைத் தாக்குதலை முறியடித்தது சிரிய இராணுவம்

188

டமாஸ்கஸ் (Damascus) நகர் மீது இஸ்ரேல் நடத்திய ஏவுகணைத் தாக்குதலை முறியடித்துள்ளதாக சிரிய இராணுவம் தெரிவித்துள்ளது.

சிரியாவில் உள்ள ஈரான் மற்றும் லெபனான் ஆதரவு குழுக்களையும். அரசாங்க படைகளையும் இலக்கு வைத்து இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இஸ்ரேல் அடுத்தடுத்து நடத்திய ஏவுகணை தாக்குதல்களை முறியடித்து விட்டதாகவும், பெரும்பாலான ஏவுகணைகள் இலக்கை எட்ட முன்னரே சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாகவும், சிரியா அறிவித்துள்ளது.

சிரியாவில் ஈரான் ஆதரவு போராளிகளை குறிவைத்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இராணுவ நடவடிக்கையை முன்னெடுத்த சில நாட்களில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *