அபுதாபி ஆட்சியாளர்களால் தனது உயிருக்கு ஆபத்து என்று கூறி ஐக்கிய அமீரக இளவரசர் ஷேக் ரஷித் பின் அல்-ஷாரிக் கட்டார் நாட்டில் தஞ்சமடைந்துள்ளர்.
டோஹாவை இன்று சென்றடைந்துள்ள அவர், அமெரிக்க ஊடகம் ஒன்றுக்கு இன்று அளித்துள்ள பேட்டியில், ஐக்கிய அமீரகத்தின் தலைநகரான அபுதாபியின் ஆட்சியாளர்கள் தம்மை மிரட்டி வருவதாகவும்,உயிருக்கு ஆபத்து இருப்பதால் கட்டாரில் தஞ்சமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆனால் ஐக்கிய அமீரக இளவரசர் ஷேக் ரஷித் பின் அல்-ஷாரிக் ஐக்கிய அமீரக வெளியுறவு அமைச்சர் மறுத்துள்ளார்.
ஐக்கிய அமீரக வரலாற்றில் முதன்முறையாக ஆட்சியாளர்கள் மீது அரச குடும்பத்தை சேர்ந்த ஒருவர் வெளிப்படையாக குற்றம் சாட்டுவது இதுவே முதன்முறையாக உள்ளமையால் இந்த விடயம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பயங்கரவாதத்துக்கு துணை போவதாக கூறி கட்டார் நாட்டுடனான தூதரக உறவை கடந்தாண்டு சவூதி அரேபியா, ஐக்கிய அமீரகம்,எகிப்து,பஹ்ரைன் உள்ளிட்ட சில நாடுகள் துண்டித்துள்ளமை குறிபிடத்தக்கது.