முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

உலகம் முழுவதும் 5-ல் ஒருவர் ஆரோக்கியமற்ற உணவுகளால்…

791

உலகம் முழுவதும் 5-ல் ஒருவர் ஆரோக்கியமற்ற அதிக சர்க்கரை, உப்பு, பதப்படுத்தப்பட்ட இறைச்சி உணவுகளால் மரணமடைகிறார்கள் – என ஆய்வில் தெரியவந்து உள்ளது.

தி லான்ஸெட் ஆன்லைனில் 195 நாடுகளில்  நடத்திய ஆய்வு முடிவுகள், வெளியிடப்பட்டு உள்ளது அதில் கூறி இருப்பதாவது:-
உணவு தொடர்பான இறப்பு விகிதம் உஸ்பெகிஸ்தானில் மிக அதிகமாக இருந்தது மற்றும் இஸ்ரேலில் மிகக் குறைவாக இருந்தது. இந்த இறப்பு விகிதத்தில் அமெரிக்கா 43வது இடத்திலும் , பிரிட்டன் 23வது இடத்திலும்,  சீனா 140வது மற்றும் இந்தியா 118 வது இடத்திலும் உள்ளன.

கொட்டைகள் மற்றும் விதைகள், பால் மற்றும் முழு தானியங்கள் போன்ற ஆரோக்கியமான உணவுகளின் நுகர்வு சராசரியாக குறைவாக இருந்தது, மேலும் மக்கள் அதிக சர்க்கரை பானங்கள் மற்றும் அதிக பதப்படுத்தப்பட்ட இறைச்சி மற்றும் உப்பு ஆகியவற்றை உட்கொண்டனர்.
ஆய்வில் பரிந்துரைக்கப்பட்ட பருப்பு மற்றும் விதைகள் பரிந்துரைக்கப்பட்ட அளவுகளில் 12 சதவிகிதம் மட்டுமே மக்கள் சாப்பிடுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.  பரிந்துரைக்கப்பட்ட 21 கிராமில்  சராசரியாக 3 கிராம் தான்  ஒரு நாளைக்கு  உட்கொள்கின்றனர். பரிந்துரைக்கப்பட்ட அளவை விட சர்க்கரை பானங்கள்  10 மடங்கு அதிகமாக குடிக்கிறார்கள்.
சர்க்கரை, உப்பு மற்றும் கெட்ட கொழுப்புகள் அதிகமான உணவுகள் இதய நோய், பக்கவாதம், நீரிழிவு மற்றும் பல வகையான புற்றுநோய்களுக்கான ஆபத்து காரணிகளாக அமைகின்றன.
உணவு சம்பந்தமான இறப்புக்கள் இந்த ஆய்வில் 2017 ல் 11 மில்லியன் என்று கண்டறியப்பட்டது,, கிட்டத்தட்ட 10 மில்லியன்  பேர் இதய நோய்களாலும், புற்றுநோயால் சுமார் 913,000 பேரும்,  2 நீரிழிவு நோய்களால்  339,000 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
உணவு தொடர்பான வருடாந்திர இறப்பு 1990 ஆம் ஆண்டில் 8 மில்லியனிலிருந்து அதிகரித்து உள்ளது என அதில் கூறப்பட்டு உள்ளது.
நோய் ஆய்வுக்கான உலகளாவிய அமைப்பு  1990 ஆம் ஆண்டு முதல் 2017 வரையிலான 15 உணவுப்பொருட்களின் நுகர்வு போக்குகளை கண்காணித்தது. கிறிஸ் முர்ரே, வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டு நிறுவனத்தின் இயக்குனர் இந்த ஆய்வை மேற்கொண்டார். அவர் கூறும் போது உலகில்  இருக்கும்  ஆபத்து காரணிகளை விட அதிகமான இறப்புகளுக்கு சுகாதாரமற்ற உணவே காரணம் என கூறினார்.
எங்கள் ஆய்வில் பிரதான உணவு ஆபத்து காரணிகள் என்பது  சோடியம் அதிக உட்கொள்ளல் அல்லது முழு தானியங்கள், பழங்கள், கொட்டைகள் மற்றும் விதைகள் மற்றும் காய்கறிகள் போன்ற ஆரோக்கியமான உணவுகள் குறைந்த அளவு உட்கொள்ளுதலும் ஆகும் என கூறினார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *