ஒன்ராரியோவில் ஊடரடங்குச் சட்டம் அமுலாக்குவது பற்றி சிந்திக்கவில்லை என்று முதல்வர் டக்போர்ட் தெரிவித்துள்ளர்.
ஆனால் நாளை செவ்வாய்க்கிழமை புதிய கொரோனா விதிமுறைகளை அமுலாக்குவது பற்றி ஆலோசித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, புதிய விதிகள் மிகவும் கடினமானவையாக இருக்கும் என்றும் அதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
முடக்கல் நிலைமைகள் அறிவிக்கப்பட்டுள்ள அண்மைய நாட்களிலும் கொரோனா தொற்றார்கள் அதிகரிப்பதை அடுத்தே முதல் இந்த முடிவுகளை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.