முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

எதற்குப் பிறந்தோமோ அவை அனைத்தும் இல்லாமல் ஆக்கப்பட்டுள்ள நிலையில் இனியும் போராடிப் பயனில்லை – கேப்பாபிலவு மக்கள்

1468

சொந்த நிலத்தில் வாழும் உரிமை மறுக்கபட்டுள்ள நிலையில், நாம் எதற்குப் பிறந்தோமோ அவை அனைத்தும் இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளன எனவும், எனவே இனியும் போராடிப் பயனில்லை என்றும், கேப்பாபிலவில் போராடும் மக்களுக்கு முன்னுதாரணமாக உள்ள ஆறுமுகம் வேலாயுதம் கவலையுடன் தெரிவித்துள்ளார்.

“எமது நாடு” என்று எல்லோரும் கூறுகின்ற போதிலும், அதனுடைய அர்த்தம் தமக்கு விளங்கவில்லை எனவும் தெரிவித்துளள அவர், இங்கு பலரும் தங்களது உரிமைக்கான போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர் என்பதுடன், தமிழர் தாயகம் எங்கும் போராட்டங்கள் இடம்பெறுகிறது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

வீதிகளிலே மக்கள் பேராடுகிறார்கள் எனவும், அவர்களுடைய வாழ்க்கை கடந்த ஒரு ஆண்டுகளுக்கு மேலாக வீதிகளிலேயே கழிக்கப்படுகின்றன என்றும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

எமது மக்கள் தங்களது இன்ப துன்பங்களைத் துறந்து, உரிமைக்காக மட்டுமே போராடுகிற நிலையில், ஆனால் எமது தலைமைகளாலோ அல்லது இலங்கை அரசாலோ எமக்கான தீர்வுகள் வழங்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தாம் கைவிடப்பட்டுள்ளதாகவே உணர்வதாகவும், போராடும் அனைவரும் சாகும் வரை வீதிகளிலேயே இருந்துவிடுவார்களோ என்று எண்ணத் தோன்றுகின்றனது எனவும் அவர் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

தொடர்ச்சியாகப் போராடிய நிலையில், கேப்பாபிலவில் உள்ள எங்களது காணிகளை பிடித்து வைத்திருக்கும் இராணுவத்தை வெளியேறக்கோரிய தமது போராட்டமும் மழுங்கடிக்கப்பட்டுள்ளது எனவும், புனிதர்கள் புதைக்கப்பட்டுள்ள எமது துயிலும் இல்லங்களில் இராணுவம் குரங்குக் கூத்தாடுகிறது எனவும், இதனைக் கேட்ப்பதற்கு யாரும் இல்லை எனவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

கடந்த 5 நாள்களாக ஆன்மிக வழியில் போராடுவதாகவும், இன்று அந்தப் போராட்டத்தின் இறுதிநாள் எனவும், இதனுடைய நிறைவிலும் எமது உரிமை மறுக்கப்பட்டால் தாம் வாழ்வது பயனற்றது எனவும், எனவே இந்த மக்களை வழிநடத்திக் கொண்டிப்பவன் என்ற வகையில், இந்த மண்ணில் பிறந்த பாவங்களைப் போக்க இமயமலைக்குச் செல்லவுள்ளதாகவும் அவர் மிகவும் விரக்தியுடனும் கவலையுடன் கூறியுள்ளார்.

அங்கு சென்று எமது மக்களுக்கு தீர்வைப் பெற்றுத்தருமாறு ஆஞ்சநேயரிடம் மண்டியிடவுள்ளதாகவும், இதுதான் தனது இறுதி முடிவு எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *