ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையை நிராகரிப்பது என்று சிறிலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் உதயகம்மன்பில் தெரிவித்துள்ளார்.
ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கைக்கு பதில் அறிக்கையொன்றை ஏற்கனவே சிறிலங்கா அரசாங்கம் அனுப்பிவைத்துள்ளது என்றும் மனித உரிமை பேரவையில் வெளிவிவகார அமைச்சர் உரையாற்றும்போது அது பகிரங்கப்படுத்தப்படும் என்றும் உதயகம்மன்பில அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானங்களின் மூலம் வழங்கப்பட்ட ஆணைக்கு மாறாக ஆணாயாளரின் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் ஆணையாளரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களிற்கு எந்த ஆதாரங்களுமில்லை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.