சிறிலங்காவுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்படும் சிறிலங்காவுக்கு எதிராக பிரேரணைக்கு ஆதரவாக 24 வாக்குகள் கிடைக்காத பட்சத்தில் அதனை சர்வதேச ரீதியாக அடைந்த பாரிய வெற்றியாக பிரசாரம் செய்வதற்கு ராஜபக்ஷ அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
24இற்கும் குறைவான வாக்குகள் அளிக்கப்பட்டாலும் பிரேரணை நிறைவேற்றப்படும் என்பதை மறைத்து இவ்வாறான பிரசாரத்தினை மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக வெளிநாடு ஒன்றின் விளம்பர முகவரகம் தயார் படுத்தப்பட்டுள்ளதாகவும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
சர்வதேச ரீதியாக இருக்கும் சிங்களவர்களையும், தென்னிலங்கையில் உள்ள சிங்கள மக்களையும் சிங்கள தேசியவாத சிந்தனையிலிருந்து வெளியேறாது பாதுகாப்பதற்காக இந்த முயற்சி முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.