முக்கிய செய்திகள்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையிலிருந்து அமெரிக்கா விலகியுள்ளபோதிலும், இலங்கைக்கு அழுத்தங்கள் குறையும் சாத்தியம் இல்லை

770

ஐ.நா மனித உரிமைகள் பேரவையிலிருந்து அமெரிக்கா விலகியுள்ளபோதிலும், இலங்கைக்கு அழுத்தங்கள் குறையும் சாத்தியம் இல்லை என்று இலங்கையின் முன்னாள் இராஜதந்திரியான தயான் ஜெயதிலக தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகள் பேரவையில் இருந்து அமெரிக்கா விலகியுள்ள போதிலும் பேரவையில் அதன் செல்வாக்கு தொடரும் எனவும், தமது சொந்த நலன்களை கருத்திற்கொண்டே பேரவையில் இருந்து அமெரிக்கா விலகியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

இலங்கைக்கு எதிராக யோசனையை முன்வைத்த அமெரிக்கா விலகியமை காரணமாக இலங்கைக்கான அழுத்தங்கள் குறையும் என்ற கருத்து நிலவுகின்ற போதிலும், அது சாத்தியமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா இல்லாவிடினும் பிரித்தானியாவும் கனடாவும் இலங்கை மீது அழுத்தங்களை அமரிக்காவின் சார்பில் கொடுக்கக்கூடிய நிலை உள்ளது எனவும், அதுவும் பிரித்தானியாவிலும் கனடாவிலும் இன்று இலங்கை தமிழர்களின் வாக்குபலம் அதிகரித்திருப்பதால், அந்த இரண்டு நாடுகளும் அமெரிக்காவின் இடத்தை நிரப்பக்கூடியன என்றும் தயான் ஜெயதிலக மேலும் தெரிவித்துள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *