ஒன்ராரியர்கள் அனைவரும் மிகவும் பாதுகாப்பாக இருக்குமாறு மாகாண முதல்வர் டக்போர்ட் கோரியுள்ளார்.
விஞ்ஞானிகளும், மருத்துவர்களும் மூன்றாவது கொரோனா வைரஸ் அலை ஒன்ராரியோவில் பரவலடைய ஆரம்பித்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
இந்த அறிவின் பின்னர் ஒவ்வொரு நொடியும் ஒன்ராரியர்கள் தங்களின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
இதேவேளை ஒன்ராரியோவின் அறிவியல் ஆலோசனைப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் ஒன்ராரியொவில் கொரோனா வைரஸ் தீவிரமடைவதற்கான அறிகுறிகள் வெளியிடப்பட்டுள்ளன