ஒன்ராரியோவில் கடந்த இரண்டு தினங்களில் 5ஆயிரத்து 839பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக மாகாண பொதுச்சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் இந்த இரண்டு தினங்களில் 100உயிரிழப்புக்களும் பதிவாகியுள்ளதாகவும் பொதுச்சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
அதேநேரம் ரொரண்டோவில் 700பேருக்கு தொற்றிருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இதேவேளை, ஆல்பேர்ட்டாவின் 900பேர் வரை பாதிப்புக்குள்ளாகியுள்ளதோடு, மனிடோபாவில் 327பேர் தொற்றுக்குள்ளானதாக அறிவிக்கப்பட்டுள்ளது