முக்கிய செய்திகள்

ஒன்ராரியோவில் தீவிர சிகிச்சைப் பிரிவில் 701 பேர் அனுமதி

224

ஒன்ராறியோவில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள தொற்றாளர்களின் எண்ணிக்கை 701 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

அத்துடன், நேற்று இரண்டாவது நாளாக இதுவரை இல்லாமல், அதிகளவு தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.

வியாழக்கிழமை, முன்னொருபோதும் இல்லாதளவாக, 4 ஆயிரத்து 736 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

நேற்று, இந்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 818 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் ஏழு நாள் சராசரியும், தற்போது, 4 ஆயிரத்து 292 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை, பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட மாதிரிகளில் 6.3 வீதமானோருக்கு தொற்று உறுதியாகியிருந்தது.

நேற்று 8.2 வீதமானோருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *