கடந்த 24 மணி நேரத்தில் ஒன்ராரியோ மாகாணத்தில் ஆயிரத்து 299பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
பெப்ரவரி மாதத்தின் நடுப்பகுதியிலிருந்தான நிலைமையிலிருந்து நாளொன்றில் கண்டறியப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை இதுவாகும் என்று பொதுச்சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் ரொரண்டோவில் 329பேருக்கும், பீல் பிராந்தியத்தில் 329பேருக்கும், யோர்க் பகுதியில் 116பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதேவேளை ஒன்ராரியோவில் கடந்த 24 மணிநேரத்தில் 46ஆயிரத்து 586பேருக்கு கொரோனா தொற்று குறித்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.