ஒன்ராரியோவில் 2ஆயிரத்து 584 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டள்ளனர். அத்துடன் கடந்த 24 மணி நேரத்தில் 24கொரோனா மரணங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் பொதுசுகாதார பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், அதிதீவிர சிகிச்சை அளிப்பு பிரிவானது, அனைத்து வைத்திய சாலைகளிலும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மைய நாட்களில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் சற்று வீழ்ச்சி ஏற்பட்டுள்ளபோதும் அதிதீவிர சிசிச்சைப் பிரிவுக்கு அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படவில்லை என்று சுகாதாரத்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.