ஒன்ராரியோவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றுக்கு 2ஆயிரத்து 417பேர் இலக்காகியுள்ளனர்.
அத்துடன் 2இலட்சத்து 55ஆயிரத்து 2பேர் ஒன்ராரியோவில் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இங்கு கடந்த 24 மணிநேரத்தில் 50மரணங்களும் ஒட்டுமொத்தமா க 5ஆயிரத்து 83 மரணங்களும் சம்பவித்துள்ளன.
இதேவேளை நாடாளவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றினால், 19ஆயிரத்து 94பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை ஏழு இலட்சத்து 47ஆயிரத்து 383பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், நான்காயிரத்து 852பேர் பாதிக்கப்பட்டதோடு 120பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், 63ஆயிரத்து 668பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 849பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.