ஒன்ராரியோவில் மூன்று இலட்சத்து 816 தொற்றாளர்கள் இதுவரையில் கண்டறியப்பட்டுள்ளதாக மாகாண பொது சுகாதாரத்துறையினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் ஆயிரத்து 62 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதோடு 24 மரணங்களும் இடம்பெற்றுள்ளதாகவும் பொதுசுகாதாரத் துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதேவேளை நாடாளவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் இரண்டாயிரத்து 307பேர் பாதிக்கப்பட்டதோடு 34பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றால், இதுவரை எட்டு இலட்சத்து 66ஆயிரத்து 503பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 21ஆயிரத்து 994பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், 30ஆயிரத்து 731பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 567பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.