ஒன்ராரியோ சுகாதாரத்துறை நிலைமைகளை சரியாக கையாளும் என்பதில் தான் உறுதியாக உள்ளதாக முதல்வர் டக்போர்ட் தெரிவித்துள்ளார்.
தற்போது அனைத்து ஒன்ராரியர்களுக்கும் தடுப்பூசியைப் பெற்றுக்கொடுக்கும் முயற்சிகளை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தடுப்பூசிகளே ஒன்ராரியோவில் ஏற்படும் கொரோனா தாக்கத்தினை கட்டுக்குள் கொண்டு வரும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் கொரோனா தடுப்பூசிகள் இந்த மாத இறுதிக்குள் கிடைக்கவுள்ளதால் நிலைமைகள் பாரதூரமாகது இருக்க வாய்ப்புக்கள் உள்ளதாகவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.