ஒன்ராரியோவில் கடந்த நாட்களில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிரிப்பை அடுத்து பொதுசுகாதார அதிகாரிகள் விசேட ஆராய்வுக் கூட்டமொன்றை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது கணிசமான பகுதிகளில் நிபந்தனைகளுடனான மீளத்திறக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையிலேயே இவ்வாறான ஆராய்வு இடம்பெறவுள்ளது.
இதேவேளை, பிராந்திய ரீதியாக, சில பகுதிகளில் கொரோனா விதிமுறைகளை இறுக்கமாக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்படவுள்ளதாகவும் அறியமுடிகின்றது.
எவ்வாறாயினும், இந்த ஆராய்வுக் கூட்டத்தின் பின்னர் ஒன்ராரியோ சுகாதார தலைமை அதிகாரிகளும் விசேட கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.