ஒன்ராரியோவில் கடந்த 24 மணிநேரத்தில் 1829 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் 11 மரணங்களும் சம்பவித்துள்ளது.
பெப்ரவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து தற்போது வரையிலான காலப்பகுதியில் நாளொன்றில் கண்டறியப்பட்ட அதிக எண்ணிக்கையாகும் என்று பொதுசுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 4216 பேர் பாதிக்கப்பட்டதோடு 27 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 9,27,064 பேர் பாதிக்கப்பட்டுள்ள துடன் 22,617 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், 33,399 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 587 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.