இந்திய மீனவர்களின் படகும் சிறிலங்கா கடற்படையினரும் படகும் மோதியதில் மூன்று இந்தியர்கள் சிறிலங்கா மீனவர் ஒருவர் உட்பட நால்வர் கொல்லப்பட்டுள்ளமை அதிர்ச்சியடைந்துள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
சிறிலங்காவுக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரிடம் இந்த சம்பவம் குறித்து கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
புதுடில்லிக்கான சிறிலங்காவின் பதில் உயர்ஸ்தானிகரை அழைத்து கடும் கண்டனமும் வெளியிடப்பட்டுள்ளது.
உயிரிழப்புக ளுக்கான எங்கள் வேதனையை வெளியிட்டுள்ளோம். மீனவர்கள் விவகாரத்தை மனிதாபிமான முறையில் கையாளவேண்டும் என வலியுறுத்தியுள்ளோம்.
இருநாடுகளிற்கும் இடையில் இந்த விவகாரம் குறித்து காணப்படும் புரிந்துணர்வை பின்பற்றவேண்டும் இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் இடம்பெறுவதை தவிர்ப்பதற்கான தீவிர முயற்சிகளை எடுக்கவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளோம் எனவும் இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.