கனடாவில் கஞ்சா போதைப் பொருளை விற்பதும் நுகர்வதும் சட்டபூர்வமாக்கப்படும் நிலையில், அதனை எதிர்கொள்வதற்கு பொருமளவு கனேடியர்கள் இன்னமும் தயாராகவில்லை என்பதனை அண்மைய கருத்துக் கணிப்புகள் காட்டுகின்றன.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட இந்த கருத்துக் கணிப்புகளின் அடிப்படையில், இந்த கஞ்சா சட்டபூர்வமாக்கல் செயற்பாடுகள் அளவுக்கு அதிகமான வேகத்தில் நடைமுறைக்கு கெர்ணடுவரப்பட முயற்சிக்கப்படுவதாக நாட்டின் அரைப் பங்கு கனேடியர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த இந்த சட்டமானது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 17ஆம் நாள் முதல் நடப்புக்கு வரும் என்று பிரதமர் ஜஸ்டின் ரூடோ கடந்த வாரத்தில் அறிவித்துள்ள நிலையில், இதனை இன்னமும் ஒரு ஆண்டுக்கேனும் பிற்போட்டால் சிறந்ததாக இருக்கும் என்று 55 சதவீத கனேடியர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்