கனடிய நிலத்தொடர்பு எல்லைகள் ஊடாக பிரவேசிபவர்கள் கொரோனா பரிசோதனையை காண்பிப்பது தொடர்பாக அறிவித்தல் அடுத்தவாரம் 15ஆம் திகதி வெளியிடப்படவுள்ளதாக பிரதமர் ரூடோ தெரிவித்துள்ளார்.
முன்னதாக விமானங்கள் ஊடாக கனாடாவிற்குள் பிரவேசிப்பவர்கள் கட்டாய மூன்று நாள் தனிமைப்படுத்தல் மற்றும் 14நாள் தனிமைப்படுத்தல் ஆகியவற்றுக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்றும் அவர்கள் கொரோனா பரிசோதனை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் பிரதமர் நிலத்தொடர்பு எல்லைகள் தொடர்பில் அறிவிப்பினை விடுத்துள்ளார். குறிப்பாக மெக்சிக்கோ எல்லையை மையப்படுத்தியே இந்த அறிவிப்பு வெளியாகவுள்ளதாக பிரதமர் அலுவலகத்தகவல்கள் தெரிவிக்கின்றன