ஸ்பெயினில், தீராத நோயால் நீண்ட நாட்கள் அவதிப்படுவோரை கருணை கொலை செய்ய அனுமதிக்கும் சட்டம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் கீழ் சபையில் இடது சாரி கூட்டணி அரசினால் கொண்டு வரப்பட்ட இந்த சட்டத்துக்கு ஆதரவாக 202 உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர். இதற்கு எதிராக 140 வாக்குகள் பதிவாகியுள்ளன.
இதையடுத்து, வரும் ஜூன் மாதம் முதல் ஸ்பெயினில், கருணை கொலை சட்டம் அமுலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் தீவிர வலதுசாரிகள். தாங்கள் ஆட்சி அமைக்கும் போது இந்த கருணைக் கொலை சட்டத்தை நீக்குவோம் என்று தெரிவித்துள்ளனர்.