முக்கிய செய்திகள்

கர்ப்பிணிப் பெண்கள் அஸ்ட்ரா செனெகா தடுப்பூசியை செலுத்திக்கொள்ள பிரேசில் தடை

237

பிரேசில் நாட்டில் கர்ப்பிணிப் பெண்கள் அஸ்ட்ரா செனெகா  தடுப்பூசியை செலுத்திக்கொள்ள அந்நாட்டு சுகாதாரத்துறை இடைக்கால தடை விதித்துள்ளது

கடந்த 10 ஆம் திகதி 35 வயது கர்ப்பிணி பெண் ஒருவர், அஸ்ட்ரா செனெகா தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகு உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

அவரது உயிரிழப்புக்கு தடுப்பூசியால் ஏற்பட்ட பக்க விளைவே காரணம் என கூறப்படுகிறது. எனினும் பிரேசிலில் வேறு எந்த கர்ப்பிணி பெண்களுக்கும் இது போன்ற பக்க விளைவுகள் ஏற்பட்டதாக பதிவாகவில்லை.

இருப்பினும் இது குறித்து விரிவான ஆய்வு நடத்த வேண்டும் என்பதால், பிரேசில் நாட்டில் கர்ப்பிணி பெண்கள் அஸ்ட்ரா செனெகா தடுப்பூசியை செலுத்திக் கொள்ள இடைக்கால தடை விதிக்கப்படுவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் அங்கு பயன்பாட்டில் இருக்கும் ஏனைய  தடுப்பூசிகளை கர்ப்பிணி பெண்கள் செலுத்திக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *