கலிஃபோர்னியாவின் தென் பகுதியில் அமைந்துள்ள மதுபான விடுதி ஒன்றினுள் நேற்று பின்னிரவு வேளையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காவல்துறை அதிகாரி மற்றும் துப்பாக்கிப் பிரயோகத்தினை மேற்கொண்ட சந்தேக நபர் உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
பெருமளவானோர் காணப்பட்ட அந்த விடுதியினுள் இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தினை அடுத்து, அதற்குள் சென்ற குறித்த இந்த காவல்துறை உத்தியோகத்தரும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானதாகவும், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்து விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எனினும் குறித்த அந்த துப்பாக்கிதாரி எவ்வாறு கொல்லப்பட்டார் என்ற விபரங்க்ள் எவையும் உடனடியாக அதிகாரிகளால் வெளியிடப்படவில்லை.
இதேவேளை இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பலியானவர்களை தவிர மேலும் 10 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.