முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

காலநிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் இந்திய மக்களின் வாழ்க்கை தரத்தை பெரிதும் பாதிக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது

955

வெப்பநிலை மற்றும் மழை உட்பட அனைத்து காலநிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் இந்திய மக்களின் வாழ்க்கை தரத்தை பெரிதும் பாதிக்கும் என்று உலக வங்கி வெளியிட்ட அறிக்கை ஒன்றில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

பருவநிலை மாறுவதால் விவசாயம் மற்றும் ஆரோக்கியம் போன்றவற்றில் ஏற்படும் பாதிப்பே வாழ்க்கை தரம் குறைவதற்கு காரணம் என்றும் அதில் தெரிவிக்க்பபட்டுள்ளது.

குறிப்பாக மத்திய, வட மற்றும் வடமேற்கு இந்தியாவில் அதிக அளவில் பாதிப்பு ஏற்படும் எனவும், மத்தியப்பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் வாழ்க்கை தரம் 9 சதவீதம் குறையும எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த மாற்றத்தால் சுமார் 600 மில்லியன் மக்கள் பாதிப்படையலாம் என்றும், இதனால் தெற்காசியாவில் சீரற்றநிலை மற்றும் வறுமை ஏற்பட வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆய்வறிக்கையின் படி 2050ஆம் ஆண்டிற்குள் இந்தியாவின் வெப்பநிலை 1 தொடக்கம் 2 பாகை செல்சியசினால் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் மூலம் இந்திய பொருளாதாரத்தில் பெரிய மாற்றம் ஏற்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், இந்த அறிக்கை அனைவரிடமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *