முக்கிய செய்திகள்

காவல்துறை அதிகாரி ஒருவரை கடித்தவருக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு

359

ரொறன்ரோவில் முடக்க நிலை நடைமுறையில் உள்ள நடத்தப்பட்ட போராட்டங்களின் போது காவல்துறை அதிகாரி ஒருவரை கடித்தவருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சனிக்கிழமை பிற்பகல் குயீன்ஸ் பார்க்கில் இருந்து நகரின் பிரதான வீதிகள் வழியே சுமார் 5 ஆயிரம் பேர் முடக்க நிலைக்கு எதிராக பேரணியாகச் சென்றனர்.

இதன்போது மிசிசாகாவைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞன் ஒருவர் இரண்டு காவல்துறையினரை தாக்கியதுடன் ஒருவரை, கடித்து காயப்படுத்தியுள்ளார்.

இதையடுத்து, அவரைக் கைது செய்துள்ள காவல்துறையினர் இரண்டு குற்றச்சாட்டுகளை இவர் மீது முன்வைத்துள்ளனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *