நோர்வேயில், கொரோனா விதிமுறைகளை மீறிய பிரதமர் எர்னா சொல்பேர்க்கிற்கு (Erna Solberg) காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர்.
நோர்வேயில், இரண்டு முறை பிரதமராக பதவி வகித்துள்ள எர்னா சொல்பேர்க் கடந்த பெப்ரவரி மாத இறுதியில் தனது 60-வது பிறந்த நாளை கொண்டாடியிருந்தார்.
நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால், 10- க்கும் மேற்பட்டோர் விழாக்களில் பங்கேற்க அனுமதி இல்லை என்று நோர்வே அரசு அறிவித்திருந்தது.
இந்த கட்டுப்பாடுகளை மீறி தனது குடும்ப உறுப்பினர்கள் 13-க்கும் மேற்பட்டோருடன் பிறந்த நாளைக் கொண்டாடியதால் பிரதமருக்கு 20 ஆயிரம் நோர்வேஜியன் குரோன்களை (krone) காவல்துறையினர் அபராதமாக விதித்துள்ளனர்.