வடகொரிய தலைவர் கிம் ஜொங் உன்னின் சகோதரி கிம் யோ ஜாங் அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
வடகொரிய அரசின் அதிகாரபூர்வ நாளிதழில் ஒன்றில், கிம் யோ ஜாங் வெளியிட்டுள்ள அறிக்கை வெளியாகியுள்ளது.
அந்த அறிக்கையில், “எங்கள் நிலத்தில் துப்பாக்கியின் வாசனையை பரப்ப போராடும் அமெரிக்காவின் புதிய நிர்வாகத்திற்கு ஒரு அறிவுரை.
அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு நீங்கள் நன்றாக தூங்க விரும்பினால், உங்கள் தூக்கத்தை கெடுக்கும் வேலைகளை தொடக்கத்திலிருந்தே செய்யாமல் இருப்பது நல்லது” என்று குறிப்பிட்டுள்ளார்.
வடகொரிய தலைவர் கிம்முக்கு அடுத்து சக்திவாய்ந்த நபராக உள்ள இவரது இந்த எச்சரிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.