ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதியான கிளிநொச்சியைச் சேர்ந்த ஆனந்தசுதாகரை பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வழியுறுத்தி, தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கையெழுத்து பெற்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கும் நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.கடந்த 2008 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு, மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு கடந்த ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர் தமிழ் அரசியல் கைதியான ஆனந்த சுதாகர். அவரது மனைவி அண்மையில் இயற்கை எய்தினார். ஆனந்த சுதாகருக்கு 9 மற்றும் 11 வயதில் ஆண்,பெண் பிள்ளைகள் உள்ளனர். தாயை இழந்த குறித்த இரு பிள்ளைகளும் இன்று நிர்க்கதியான நிலையில் உள்ளனர். எனவே அரசியல் கைதியான ஆனந்த சுதாகருக்கு, பொதுமன்னிப்பின் அடிப்படையில் ஜனாதிபதி விடுதலையை வழங்க வேண்டும். அதனை வலியுறுத்தி தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கையெழுத்துக்கள் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தமிழ் அரசியல் கைதியான ஆனந்த சுதாகரின் விடுதலையை விரும்பிய பெரும்பான்மை இன நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் கையெழுத்துக்கள் பெற்றுக்கொள்ளப்பட்டு ஜனாதிபதியிடம் கையளிக்க உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கிளிநொச்சியைச் சேர்ந்த ஆனந்தசுதாகரை பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய கையெழுத்து
Mar 23, 2018, 21:55 pm
1501
Previous Postஉறவுகளை ஒதுக்குவதால் என்ன நிகழும்?
Next Postஜெனிவா வாக்குறுதிகளை நிறைவேற்ற காலவரம்புடன் கூடிய உத்தி ஒன்றை இலங்கை அரசாங்கம் வகுத்துக் கொள்ள வேண்டும் - கனடா