முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

கிழக்கு துறைமுகம் தொடர்பில் தீர்மானம் எடுக்கவில்லையாம்; அமைச்சர் கெஹலிய

199

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பாக,  சிறிலங்கா அரசாங்கம் இறுதி தீர்மானம் எதையும் இன்னமும் எடுக்கவில்லை என அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

“கொழும்பு  துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பாக, யோசனைகள் மாத்திரம் முன்வைக்கப்பட்டுள்ளதே தவிர, தீர்மானங்கள் ஏதும் இதுவரையில் எடுக்கப்படவில்லை.

துறைமுக ஊழியர் சங்கம், துறைமுக  பொறியியலாளர் சங்கம் முன்வைத்த யோசனைகள் அனைத்தும் பரிசீலனை செய்யப்படுகிறது.

இந்த விடயம் குறித்து சில தவறான கருத்துக்கள் காணப்படுகின்றன.

கிழக்கு முனையம் தொடர்பில் தற்போது முன்வைக்கப்பட்ட யோசனைகள் பல்வேறு மட்டங்களில் பேச்சுக்கள் நடத்தப்படுகின்றன.

இறுதி தருணத்தில் முடிவுகளில் மாற்றங்கள் ஏற்படலாம்.” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *