ஐரோப்பிய நாடான குரோசியாவில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்த நிலநடுக்கும் ரிக்டர் அளவு கோலில் 6.3 ஆக பதிவானது.
இந்த நிலநடுக்கத்தால் தலைநகரின் தென்கிழக்கில் பெருமளவு கட்டங்கள் சேதமடைந்துள்ளன.
இடிபாடுகளில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்றும், மேலும் பலர் காயம் அடைந்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிப்பதாக, குரோசிய பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
குரோசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அதிர்வுகள் செர்பியா மற்றும் போஸ்னியாவிலும் உணரப்பட்டுள்ளன