முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

குற்றம் புரிந்த சிறிலங்கா இராணுவத்தினரும் தண்டனைகளின்றி விடுவிக்கப்பட வேண்டும் என்ற இலங்கை அதிபரின் நிபந்தனையை கூட்டமைப்பு நிராகரித்துள்ளது

627

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு சிறிலங்கா இராணுவத்தினரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று அரச தலைவர் நிபந்தனை விதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் மைத்திரிபால சிறிசேன விதித்துள்ள நிபந்ததனை தொடர்பாக இன்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே மாவை சேனாதிராஜா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பிலான பிரேரணைக்கு கடந்த காலத்தில் இலங்கை அரசாங்கம் இணை ஆதரவு வழங்கியிருந்தது என்பதை, அதாவது நாட்டில் இடம்பெற்ற போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உரிய முறையில் விசாரணை மேற்கொள்ளப்படும் என்பதையும், தவறிழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் இலங்கை அரசும் ஏற்றுக் கொண்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனை வலியுறுத்தும் தீர்மானம் இலங்கையின் அனுசரணையுடன் ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், தற்போது தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு, சிறிலங்கா இராணுவத்தினரும் போர்க் குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுதலை செய்யப்பட வேண்டும் என்று அரச தலைவர் நிபந்தனை விதிப்பதானது, அவர் வழங்கிய வாக்குறுதிகளை மீறும் செயலாகும் என்றும் மாவை சேனாதிராஜா மேலும் தெரிவித்துள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *