குவைத்துக்கான வடகொரிய தூதுவர், ரியூ ஹியூன் வூ (Ryu Hyun-woo) தென்கொரியாவுக்கு தப்பிச் சென்றுள்ளார் என்று, தென் கொரியாவின் தேசிய சட்டமன்ற புலனாய்வுக் குழு தெரிவித்துள்ளது.
வடகொரிய தூதுவராக பணியாற்றிய ரியூ ஹியூன் வூ கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் தென் கொரியாவுக்கு தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
எனினும் அவர் எப்படி தென் கொரியாவுக்குள் நுழைந்தார் என்பது பற்றிய விளக்கம் எதையும், தென்கொரிய சட்டமன்ற புலனாய்வுக் குழு வெளியிடவில்லை.
இதையடுத்து, வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்கும் இடையிலான பதற்றம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.