கூட்டாட்சி தேர்தலை தற்போதைக்கு நடத்த வேண்டாம் என்று நாடாளுமன்றக்குழுவொன்று ஏகமனதாக வலியுத்தியுள்ளது.
பிரதமர் ரூடோ தலைமையிலான அரசாங்கம் சிறுபான்மையாக உள்ளமையால் மீண்டும் தேர்தலொன்றுக்குச் செல்லும் நோக்கம் அதிகமானவர்களிடத்தில் காணப்படுகின்றதாக ஆய்வாளர்களின் தகவல்கள் காணப்பட்டன.
இந்நிலையில் கூடிய நாடாளுமன்றக் குழுவானது தேர்தலை கொரோனா பரவல் மற்றும் பொருளாதாரம் சம்பந்தமான மீள் எழுச்சியின் பின்னர் நடத்துவதே சிறந்தது என்ற தீர்மானத்தினை எடுத்த நாடாளுமன்றக் குழுவின் உறுப்பினர்கள் இவ்வாறு ஏகமனதான தீர்மானத்தினை எடுத்திருந்தார்கள்.
அத்துடன் பிரதமர் ரூடோ தற்துணிவில் தேர்தல் அறிவிப்பை விடுத்தாலே அன்றி தற்போதைக்கு தேர்தல் நடத்தப்படமாட்டாது என்று லிபரல் கட்சியின் உறுப்பினர்கள் நாடாளுமுன்ற குழு கூட்டத்தில் குறிப்பிட்டுள்ளனர்.