கொங்கோவில், கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 25 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
மத்திய ஆப்பிரிக்க நாடான கொங்கோ குடியரசில், பென்னி மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்துக்குள் ஏடிஎஃப் (ADF) என்ற கிளர்ச்சிப் படையினர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு இரகசிய தகவல் கிடைத்ததையடுத்து, அவர்கள் விரைந்து சென்று தேடுதல் நடத்தியுள்ளனர்.
இதன்போது, 25 கிராமவாசிகள் கிளர்ச்சியாளர்களால் கொல்லப்பட்ட நிலையில் சடலங்களாக இருப்பதை, கண்டதாக கொங்கோ பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
அப்பகுதியில் பதுங்கியிருந்த கிளர்ச்சியாளர்கள் பாதுகாப்பு படையினரின் தாக்குதலை அடுத்து, தப்பிச் சென்றுள்ளனர்.