இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகளின் அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
பாரத்பயோடெக் நிறுவனத்தின் கோவக்சின் தடுப்பூசி மற்றும் சீரம் இன்ஸ்டியூட் தயாரிக்கும் கோவிஷீல்டு தடுப்பூசியின் அவசர கால பயன்பாட்டுக்கு இந்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்த நிலையில், இதனை வரவேற்று பிரதமர் மோடி தனது கீச்சகத்தில் பதிவிட்டுள்ளார். குறித்த பதிவில், “கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்கு வலுப்படுத்தும் வகையில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.