சிறிலங்காவில் கொரோனா தடுப்பூசி போடும் நட்டவடிக்கைகள் இராணுவத்தினரின் தலைமையிலேயே முன்னெடுக்கப்படவுள்ளதாக, சிறிலங்கா இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அடுத்த மாதத்தில் ஏதேனும் ஒருவகை கொரோனா தடுப்பூசி நாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகளில் சிறிலங்கா அரசாங்கம் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில் தடுப்பூசி மருந்து கிடைத்ததும் அதனை சிறிலங்கா இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள், பொதுமக்களுக்கு வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.