நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கொரோனா தொற்று கையை மீறிச் சென்று விட்டதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பொதுமக்களின் கவனக் குறைவு மற்றும், பொறுப்பின்மை காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும், பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
கொரோனா தொற்றின் தீவிரத்தை மக்கள் அலட்சியமாக எடுத்துக் கொண்டுள்ளனர் என்று, சங்கத்தின் செயலாளர் பாலசூரிய தெரிவித்துள்ளார்.
“ஊரடங்கு உத்தரவு மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வாழும் மக்கள், அடிப்படை சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்ற தவறிவிட்டார்கள்.
இது மிகவும் பரிதாபகரமான சூழ்நிலையாகும்.
தற்போதைய நிலையில் இருந்து மீள்வதற்கு சுகாதார அதிகாரிகளுக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.