வீட்டு தனிமைப்படுத்தல் உத்தரவினை மீண்டும் மீண்டும் மீறியமைக்காக தாய்வானில் ஒருவருக்கு 35ஆயிரம் அமெரிக்க டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மத்திய தாய்வானில் வசிக்கும் பெயரிடப்படாத இந்த நபர், சீனாவின் பிரதான நிலப்பகுதிக்கு வணிக பயணத்திலிருந்து திரும்பிய பின்னர் தனது அடுக்குமாடி கட்டிடத்தில் வீட்டு தனிமைப்படுத்தலில் உட்படுத்தப்பட்டார்.
இந்த தனிமைப்படுத்தல் காலத்தின் போது அவர் குறைந்தது ஏழு முறையாவது உத்தரவுகளை மீறியுள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
தனிமைப்படுத்தலின் போது தனது வீட்டை விட்டு வெளியேறுகையில், அயலவர்களில் ஒருவருடனும் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது