கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்றுவரும் சசிகலாவின் உடல்நிலை நல்ல முன்னேற்றத்துடன் சீராக உள்ளதென பெங்களூர் விக்டோரியா அரச வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு பெங்களூர் விக்டோரியா அரச வைத்தியசாலையில் சசிகலா சிகிச்சை பெற்றுவருகிறார்.
இந்நிலையில் அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.
குறித்த ஊடக அறிக்கையில், கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் சசிகலா எழுந்து நடக்கிறார். மருத்துவ சிகிச்சைக்கு சசிகலா நன்றாக ஒத்துழைக்கிறார். மேலும் அவர், வைத்தியக் கண்காணிப்பிலேயே தொடர்ந்து உள்ளார்” என்றுள்ளது.
இதேவேளை கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் இளவரசியின் உடல்நிலையும் சீராக உள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.