முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

சமஷ்டி அரசு எல்லைப்பாதுகாப்பில் தீவிர கரிசனை கொள்ள வேண்டும்

315

கனடாவிற்குள் அமெரிக்காவின் கடும்போக்கு வன்முறைவாதம் உள்நுழைந்துவிடாதவாறு அதிகளவு கரிசனையுடன் இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் சமஷ்டி அரசாங்கத்தினைக் கோரியுள்ளனர்.

அமெரிக்காவில் சுமூகமற்ற நிலைமையொன்று ஏற்பட்டுள்ளதை அடுத்தும், அதிகார மாற்றம் எவ்வாறு அமையும் என்பது இதுவரையில் புலப்படாதுள்ள நிலையிலும் சமஷ்டி அரசு எல்லைப்பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்களில் தீவிர கரிசனை கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், அமெரிக்காவின்முக்கிய நகரங்களில் உள்ள கனடியர்களின் பாதுகாப்பு தொடர்பிலும் மீளாய்வு அவசியம் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதனைவிடவும் கனடாவின் வடக்கு பகுதி மற்றும் ட்ரம்பை மையப்படுத்திய ஆதரளவுத்தளம் காணப்படும் கனடிய பகுதிகளில் பதற்றமான நிலைமை தோற்றம் பெறாது கண்காணிப்பு அவசியம் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *