ஸ்காபரோவில் உள்ள தமிழ்ச் சமூகத்தினருக்கான ஒரு நாள் கொரோனா தடுப்பூசி முகாம் இன்று இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 9 மணி தொடக்கம், மாலை 5 மணிவரை ஸ்காபரோ புரூக்சைட் பொதுப் பாடசாலையில் இந்த தடுப்பூசி முகாம் செயற்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இங்கு, 2003ஆம் ஆண்டுக்கு முன்னர் பிறந்த – 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பைசர் தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ள முடியும்.
இந்த தடுப்பூசி முகாமுக்கு வருபவர்கள், ஸ்காபரோவில் வசிப்பதை அல்லது தொழில் புரிவதை உறுதிப்படுத்தும் ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.